காரூண்யராம் நம் நபியின்
கல்பிலே குடி கொண்ட
கண்மணி சஹாபாக்கள்
கறையில்லா முத்துக்கள்!
அன்னலை அடி யொற்றி,
அவர் சொன்னதை செயல்படுத்தி,
மன்னிலே மறையொளி சுமந்து,
மனிதப் புனிதராய்மிளிர்ந்தோர்!
நிழல் இல்லா நபியின் நிழலாய் நின்று,
நிகரில்லா அன்பு அவர்மேல் கொண்டு,
அன்னவருக்காய் தம் இன்னுயிரை ஈந்து,
சுவனப் பூங்காவின் சொந்தமானார்கள்!
ஒளியிடம் ஒளி வாங்கி ஒளிரும் ஒளிச்சுடர்கள்!
உயர் தீனை தாங்கி நிற்கும்
தன்னிகரில்லா தியாகத் தூண்களே சஹாபாக்கள்!!
✍🏻 *நூருல் ஈமானி நூரிய்யா*
0 comments:
Post a Comment