மனாளீறுல்அன்வார் அரபுக் கல்லூரி
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரின் வைத்தியசாலை வீதியில் அமைந்தள்ள மனாளீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி 1970 ஆம் ஆண்டு மர்ஹும் அல் ஆலிமுல் பாழில் அஸ்செய்க்கு முஹம்மது இப்ராஹிம் ஹனிபா(ஆலிம்) கதிர் (ரஹ்மத்துல்லாஹ் அலைஹி) அவர்களின் அயராத முயற்ச்சியால் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் பகுதி நேர ஆண்கள் மத்ரசாவாக இயங்கி வந்து பின் பொருளாதார பிரச்சினையின் காரணமாக நீண்டகாலம் இயங்காமல் இருந்து இக்கலாபீடம் 2009/04/26 முதல் பகுதிநேர பெண்கள் அரபுக் கல்லூரியாக சிறப்பாக இயங்கி வருகின்றது.
2012,2015 ஆகிய ஆண்டுகள் இரு பட்டமளிப்பு விழாக்களும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இக் கலாபீடத்தில்
- பெண்களுக்கான மார்க்கப் போதனை.
- பாடசாலை மாணவிகளுக்கான முழுமையான ஷரீஆ கற்கை.
- அஹதிய்யா பாட வகுப்புக்கள்.
- ஏழை, அநாதை மாணவிகளுக்கான ஆத்மீக, லௌஹீக கல்வி வழிகாட்டல்.
- G.C.E. O/L, G.C.E. A/L மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல். போன்றன சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
- தற்போது 45 மாணவிகள் கல்வி கற்று வருகின்றார்கள்.
- 05 உஸ்தாத்மார்கள் பாடப்போதனை நடாத்கிறார்கள்.கல்லூரி நிருவாகம் முழு நேர தங்குமிட வசதிகள் கொண்ட மத்ரசாவாக அமைப்பதற்கு முயற்ச்சித்து வருகின்றதுAbout
நோக்கம்
- தர்பிய்யா வழிகாட்டல்செய்யும் ஆலிமாக்களை உருவாக்குதல்.
- சிறந்த குடும்ப பெண்களை உருவாக்குதல்.
- தையல் போன்ற கையத்தொழில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல்.
- தொழில் துறை சார்ந்த அறிவுகளைப் பெற்ற ஆலிமாக்களை உருவாக்குதல்.
- கல்லூரிக் கீதம் இயற்றியவர் சங்கை மிகு அஸ் செய்ஹ அப்துல் காதிர் soofi காதிரி
- 2010-July-03 Thinakaran .Madarasa History .pdf
0 comments:
Post a Comment