சமூகத்தை வழி நடாத்தும் சிறந்த ஆலிமாக்களை உருவாக்குவோம ஈருலகில் வெற்றி பெறுவோம்

كلية مناضير الانوار العربية للسيدات

மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி
Showing posts with label நீண்ட காலம் உயிர் வாழ நேச நபி சொன்ன நெறிமுறை !. Show all posts
Showing posts with label நீண்ட காலம் உயிர் வாழ நேச நபி சொன்ன நெறிமுறை !. Show all posts

Wednesday, October 24, 2018

நீண்ட காலம் உயிர் வாழ நேச நபி சொன்ன நெறிமுறை !

ladies arabic college


நீண்ட காலம் உயிர் வாழ நேச நபி சொன்ன நெறிமுறை !

நீண்ட காலம் வாழ வேண்டும் எனறே ஒவ்வொரு மனிதனும் நினைக்கின்றான். சிறிய நோயாயினும் உடனே ஆஸ்பத்திரிகளும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் செல்கின்றான். நீ இன்று மரணித்து என்றால் அந்த வசனத்தை எவரும் ஜீரனிப்பதாக தெயவில்லை. 

தான் மரணித்து விடுவதில் ஆர்வம் கொள்ளும் மனிதனை உணர்வுகளாலும் உள்ளத்தினாலும் ஒரு போதும் உவந்து கொள்ள மாட்டான். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யும் ஒருவருக்காக எதைக் கொடுக்கவும் எதைச் செலவு செய்யவும் தயராக இருக்கின்றான். உங்களுடன் கஷ்ட்டப்படுவதை விட நான் மௌத்தாகி விடுவது மேல் என்று தனது மனைவி கோபத்தை வெளியிடும் போது கணவர் கருத்து கொடுக்காமல் இருந்துவிடுவது உண்டு. என்னைக் கஸ்டப்படுத்தாமல் நீங்கள் இறந்து போய் விடுங்கள் என மனைவி கூறினால் தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறும் கணவன்கள் இல்லாமல் இல்லை. எல்லாம் நீண்ட கால வாழ்கையின் ஆசைதான்.

உங்களின் முன்னால் நான் உலகை விட்டு பிரிந்து விட வேண்டும் எங்களுக்கு வேறு யாரு உதவ இருக்கிறார்? ஏன்று மனைவி பாசக்கதையை அடுக்குகின்ற போது கணவனுக்கு ஒரு படி சந்தோசமாயினும் நோய்வாய்ப்பட்டு நொந்துபோய் இறந்துவிடுவேனோ? என்று தனது நிலையை நினைத்து ..இல்லை இல்லை உங்களை விட நான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உபாயமான ஒரு வார்த்தையை உதிர்த்துவான். எல்லாம் நீண்ட காலம் வாழ்வதற்கு நினைத்ததுதான். இடைக்காலத்தில் இறந்து விட எவர்தான் துணிகிறார்கள்.? நீண்ட காலம் உலக வாழ்வில் நிம்மதியாக வாழவே மனசுகொண்டு அதற்கான ஆய்வுகளையும் சத்து மாத்திரைகளையும் உட்கொள்கிறார்கள்.

நீண்ட காலம் வாழ்வதற்கு நேச நபி நாயகம்  அவர்கள் சொன்ன அறிவுரைகள் என்ன என்பதை ஆராய்வோம். தனது வருவாயின் பெருக்கத்தையும் தனது ஆயுளின் நீளத்தையும் விரும்பும் ஒருவர் தனது உறவினர்களைத் தளுவி நடந்து கொள்வாராக என நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பர் அனஸ் ஆதாரம் புகாரி முஸ்லிம்) 

உரவினர்களை உபசரித்து நடக்கும் போது அவர்களின் பிரார்த்தனை நமக்கு உதவியாக அமைந்து விடுகிறது.குடும்பத்தினரின் பிரார்த்தனைகள் குவலயத்தில் நீண்ட காலம் வாழ்வதற்கு வழிவகுக்கின்றது. உறவினறுடன் பகைத்துக் கொண்டு ஒதுங்கி வாழ்வதன் மூலம் யோசனை அதிகரிக்கிறது.இரத்த உறவுகளை துண்டிப்பதன் மூலம் யோசனை தலைக்கேறி இருதய வியாதி சர்க்கரை வியாதி அதிகரித்தல் போன்ற கஷ்டமான நோய்களுக்கு ஆளாகி விரைவாக உலகிலிருந்து விடை பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றான்.

இதனால்தான் இறைத்துதர் ﷺ அவர்கள் இரத்த உறவுகளுடன் பாசமாக இருக்க கருத்துப் பகர்ந்தார்கள்.உலகில் நீண்ட ஆயுளுக்கு எந்த வைத்தியரும் சொல்லாத மருந்தை மக்கத்து மாநபி அவர்கள் சொல்லியிருப்பது பெரும் பேறாகும்.

நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் ஒருவர் என்னிடத்தில் ஒரு செயலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளட்டும்.அவருக்கு நான் நான்கு விஷயங்களுக்குப் பொறுப்பேற்கிறேன்.அவர் தனது உறினரைத் தழுவி நடக்கட்டும்.அவரது ஆயள் நீளமாகும்.அவர் மீது உறவினர்கள் அன்பு செலுத்துவர்.அரன விஸ்தீரனம் ஏற்படும்.சுவர்க்கத்தில் நுழைந்திடுவார்.(கன்ஜூல் உம்மால்) எவன் தானம் செய்கிறானோ அவனுக்குத் தன்னாலேயே செல்வம் பெருகும்.( ஜேம்ஸ் ஸ்ரீபன்)

குடும்ப உறவினர்கள் பசி பட்டினியுடன் கஷ்டப்படும் போது அவர்களைக் கவனிப்பதன் மூலம் இரன விஸ்தீரனம் ஏட்படுகிறது. குடும்பத்தார்களின் அன்பு,பாசம் தன்னுடன் பிண்ணிப் பிணைந்திருக்கின்றது. எல்லாவற்றையும் விட சுவனம் செல்லும் வாய்ப்பு கிடைக்கின்றது. விட்டமின் வில்லைகளை உண்னுவதிலும் வெளிநாடுகளிருந்து தருவிக்கப்படுகின்ற பழச்சாறுகளையும்  அருந்தி ஆயட்காப்புறுதியில் சேர்ந்து நோய் வரும் போது பணம் பெறலாம் என்றெல்லாம் மேல் எண்ணம் வைத்து தானும் தனது மனைவி பிள்ளைகளும் வாழ வேண்டும் எனத்துடிப்பவர்கள் நீண்ட காலம் தனது ஆயுளை நீட்டவல்ல உறவினர் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் உயர்தர நடவடிக்கைகளை ஏன் யோசித்து செய்யக்கூடாது.

மறுமைநாளில் ரஹ்மானுடைய அர்சின் கீழ் மூன்று சாரார் நிற்பார்கள்.
1.உறவினர்களைத் தழுவி நடப்பவர் அவருக்கு இம்மையில் ஆயுளிலும் விருத்தி ஏற்படுவதுடன் வருவாயும் பெருகும். அவருக்கு கப்பிரிலும் இடவசதி ஏற்படும்.
2.கணவரை இழந்த விதவைப் பெண். அவள் தனது சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்க்க வேண்டும் கருத்தில் அவர்கள் வாலிப வயதை எய்முத் வரை மறுமணம் முடித்துக் கொள்ளதவள்
3. அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு சமைத்து விருந்து படைப்பவர்(அறிவிப்பர் அனஸ் ரழி) 

திருமணம் மடித்ததும் சிலர் உறவினர்களை அறவே மறந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு கிட்டியதும் உறவினர்களை விசாரிப்பதை விட்டு விடுகின்றனர். கடிதம் எழுதி களைத்துப் போன உறவினர்களும் போன் பண்ணி போதுமாகிப் போன குடும்பத்தினரும் ஆயிரம் ஆயிரம் இருக்கத்தான் செய்கின்றார்கள். வீடுääகல்வி குடர்காரியம் இவற்றுக்கொள்ளாம் உறவினர்களிடம் பணம் கேட்டு ஒரு பதிலுமில்லாது ஒதுங்கி வாழ்பவர்கள் அநேகம் அநேகம். ஒரு கவிஞர் பாடினார் “சொந்தங்கள் சொல்லத்தானே வெட்கங்கள்ääசோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள்” இப்பாடல் சிலரின் வாழ்வில் அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்துன்றது. குடும்பங்களைப் பேனுவோம்.கோமான் நபி கூறியது போல் வாழ்வோம். 

Nafeesathuth Thahira ( Nooriyyah )

Ladies arabic college




ladies arabic college

ladies arabic college







Share:

Total Pageviews