புகழாரம் கோர்த்து ஒரு பூமாலை இட்டு நபிநாதர் வாழ்வின் சுவையான நிகழ்வை நவின்றிட வந்தேன்-நாதரை புகழ்ந்தேன்
அன்பு நபி அப்போது அரும்பான சிறு குழவி,
அழகுருவே திரண்டு ஒரு தொட்டிலிலே தூங்கியது,
பால் நிலவு வானத்திலே பவனி வர- பௌர்ணமி நிலவோ தொட்டிலிலே துயில் கொள்ள,
தொட்டில் பௌர்ணமியின் வனப்பினிலே தோற்றுப் போனது வெண்ணிலவழகே!!
அன்னல் திருநபிகள் விழி மலர்ந்து ஆகாய திங்களினை நோக்கயிலே-
அழகு விரலை நீட்டி அதன் பக்கம் இஷாரா செய்தனரே
திரு நபியின் விரல் எங்கு சென்றதுவோ திங்களுமே அங்கு நகர்ந்து சென்றதுவே.....
விரலசைவில் விரைந்து நிலவும் நகர்ந்ததுவே!!!
அப்போது வெண்ணிலவு அண்ணலுடன் பேசியது பேசியது!!
அன்பு நபியே அகிலத்தின் ஜோதியே பூமியிலே பிறந்து பூவுலகம் சிறக்கச் செய்தீர்...
மிஃராஜ் சென்று வானுலகம் சிறக்கச் செய்வீர்...
அந்தோ என் ஆதாரமே!எப்போது என்னை தீண்டிடுவீர்?
ஓ நிலவே உன்னை தொட்டால் என்னவாவாய் வினாத்தொடுத்தார் வேந்தர் நபி
என் ஆதாரம் நீரே என் மூலமும் நீரே நீர் இன்றி நான் இல்லை
நீர் தீண்டினால் நான் இரண்டாய் பிளந்திடுவேன் என்னை இழந்திடுவேன் இருப்பை அழித்துக் கொள்வேன்!
கொஞ்சம் பொருத்திரு நிலவே வஞ்சம் தீர்த்திட கல் நெஞ்சன் அபூ ஜஹ்ல் வருவான் என்னிடம்
அப்போதுன் ஆவல் தீர்த்திடுவேன் உன்னைத் தீண்டிடுவேன் என்றார் ஏந்தல் நபி.
காலம் சென்றது வேளை வந்தது. வந்தான் அபூ ஜஹ்ல்.. முஹம்மதே நீர் நபியென நம்புவதெப்படி என்றான் நிரூபிக்க என் செய்ய வேண்டுமென்றார் நபி
பிளந்து காட்டிடும் சந்திரனை இரண்டாய்- சுட்டு விரலால் சாடை செய்தார் நபி-அக்கனமே சந்திரன் பிளந்ததிரண்டாய்!!!
சாடையால் சந்திரன் பிளந்த தென்று வாயடைத்து நின்றான் மடையன் அபூஜஹ்ல்..
மெய்ப்பொருள் யாதெனில் ஒளியே எம் நபி
ஒளி நொடியில் நிலவில் கடுகி தொட்டுப் பிளந்தது நிலவை!!!
நிலவைத் தீண்டியதால் இரண்டாய் பிளந்து பேரானந்தம் அடைந்தது நிலவு...!!
நிலவின் நீண்ட நாள் கனவு நனவானது அன்று!!!!
✍🏻 நூருல் ஈமானி
manaleerul anwar ladies arabic college Eravur Srilanka