ஒரு பெண்ணுக்கு வெட்கம் இருக்குமானால் அவளது ஆடையில் ஒழுக்கம் இருக்கும்...
ஓர் ஆணுக்கு ஒழுக்கம் இருக்குமானால் அவனது பார்வையில் கண்ணியம் இருக்கும்...
ஆனால், இன்று பெண்களின் ஆடையில் ஒழுக்கமும் இல்லை... ஆண்களின் பார்வையில் கண்ணியமும் இல்லை...
மாற்றம் தேவை...
எப்போது பெண்களின் ஆடையில் கவர்ச்சியும் அலங்காரங்களும் குறைக்கப்படுமோ அப்போதுதான் அவர்கள் மீதான ஆண்களின் பார்வை கண்ணியமானதாக மாறும்...
மாற்றம் தேவை...
கவர்ச்சியாக உடை அணிந்திருக்கும் பெண்களைக் கண்டால் ஆண்கள் எல்லோரும் ஆசைப்படத்தான் செய்வார்கள் என்பது கசப்பான ஒரு வழமையாகி விட்டது நம் சமூகத்தில்... அவ்வாறு ஆசைப்படும் ஆண்கள் ஒன்றை நினைக்க வேண்டும் தன்னுடைய சகோதரியையோ இல்லை தாயையோ இல்லை மனைவியையோ யாராவது இப்படி தவறாகப் பார்க்கும்போது தனது உள்ளம் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் ஏனெனில்,நீஙகள் தவறாக பார்க்கும் அந்த பெண்களும் யாரோ ஒருவரின் தாய்தான்...சகோதரிதான்...மனைவிதான்...மகள்தான்
மாற்றம் தேவை...
பெண் என்றால் ஆண்களின் ஆசைக்கு மட்டும்தான் என்று எண்ணாதீர்கள்...பெண் என்பவள் விவரிக்க முடியாத கவிதை...விடை காண முடியாத கேள்வி...அனைத்தையும் தாண்டி பெண் என்பவள் பலமான ஒரு பலவீனம்...அவளுடைய பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்....
வாழ்க்கை அவளை ஏதாவதொரு தருணத்தில் ஒரு உன்னதமான தியாகியாக மாற்றியே விடுகின்றது.
தாயாக அவளின் தியாகம் சொல்லிலடங்காது...
மனைவியாக அவளின் தியாகம் எல்லையில்லாதது...
பெண்மை என்றாலே தியாகம்தானே...
உன் தாயும் ஒரு பெண்தான்...
உன் சகோதரியும் ஒரு பெண்தான்...
உன் மனைவியும் ஒரு பெண்தான்...
உன் மகளும் ஒரு பெண்தான்...
தவறாக பார்ப்பது ஆண்களின் தவறு...
அதே போல் தவறாக பாரக்க தூண்டுவது பெண்களின் தவறு...
திருந்துவோம்...திருத்துவோம்...
மாற்றம் ஒவ்வொருவரதும் மனதில் எழ வேண்டும்...
படித்ததில் பிடித்தது
0 comments:
Post a Comment