முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவோம் !
அறிவு ஞானம் காணாமல் போன ஒரு சொத்தாகும் என கருணை நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அறிவினை தேடிப் படிப்பது ஆண்,பெண் இருபாலாருக்கும் கட்டாயக் கடமையாகும் என இன்னுமொரு ஹதீஸை இறைத்தூதர் ﷺ அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள்.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நாம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.முந்திய காலங்களில் பெண்கள் கடிதம் எழுத,கையப்பம் போடத் தெரிந்து கொண்டால் போதும் பெரிய அளவில் படிக்கத் தேவையில்லை என ஒரு காலம் இருக்கத்தான் செய்தது.
இன்று அந்த அமைப்புக்கள் மாறி பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் வேரூண்டியிருக்கிறது. சின்ன வயதிலே ஆண் பிள்ளைகளை கடைக்கு அனுப்புவதும்ääபெண் பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புவதும் தற்போது தற்போது முற்றாக குறைந்து விட்டது. சிறுவர் பராமரிப்பு அமைப்புகளும்,சட்டங்களும் இம்மாற்றத்திற்கு ஒரு காரணம் என்று கூடக் கூறலாம்.
இன்னும் 2 மாதத்தில் புதிய ஆண்டில் பிரவேசிக்கப் போகின்றோம். அது கல்வி ஆண்டு.சிந்தனையாண்டு,இன்டநெட் யுகமஇப்படி அடுக்கிக் கொண்டு போகலாம். இந்த யுகத்தில் வாழப் போகும் நாம் மடத்தணங்களுக்கு மடியமைத்துக் கொடுக்காமல் கல்விக்கு ஏணியமைத்துக் கொடுக்க எம்மை நாம் மாற்ற வேண்டும்.
படசாலை பிள்ளைகளின் நன்மை கருதி பெற்றோர்கள் அழைக்கப்படும் போது கண்டிப்பாக பெற்றோர் சமூகம் கொடுக்க வேண்டும் . ஆசிரியர்களுக்கிடையில் இறுக்கமான பிணைப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி வளர்ச்சியில் கால் ஊன்ற முடியும்.
நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் “நீ ஒரு அறிஞனாக இரு இல்லையேல் மாணவனாக இரு இல்லையேல் கல்விக்கு உதவுபவனாக இரு நான்காம் நபராக இராதே! என்று சொன்னார்கள்.
எப்போதும் தாகமுடையவர்களாக இருக்க வேண்டும்.கல்விக்கு முக்கியத்துவம் வழங்காமல் தனது போக்கில் போய்க் கொண்டிருப்பவர்களையும் அன்றாட வாழ்வில் சந்திக்கவே செய்கின்றோம். அவர்களைப்பற்றி சிந்திக்கவும் செய்கின்றோம்.
கல்விப்புத்துணர்ச்சி எல்லா மட்டங்களில் இருந்தும் ஊக்கமளிக்கப்பட வேண்டும். குறிப்பாக குத்பா மின்பர்கள் கல்வி வளர்ச்சிக்காக நிறைய நிறையப் பயன்படுத்தப் பட வேண்டும்.
பாடசாலைகளில் பிள்ளை படிக்கிறார்கள் என்ற உணர்வுடன் மட்டும் இருக்காது எப்படிப் படிக்கிறார்கள், எதனைப் படிக்கிறார்கள் அவர்களது குறிப்புப் புத்தகங்கள் எப்படியிருக்கிறது வீட்டு அப்பியாசங்களைச் சரிவரசந் செய்கின்றார்களா? என்பதை நாமும் பார்வையிடுவதுடன்,ஆசிரியர்களிடமும் வினவிப் பார்க்க வேண்டும்.
கல்விச் சுற்றலா,கல்விக் கண்காட்சி போன்றவற்றிற்கு நமது பிள்ளைகளை அனுப்புவதற்குக் கூட தயங்குகின்ற பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
கல்வியில்லாத இருட்டறை வாழ்கையில் இருந்து பெற்றாரகிய நாம் அறிவு வெளிச்சத்துக்கு வரவேண்டும். நமது வருங்காலச் செல்வங்கள் படிக்க வேண்டும். பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். என்ற நல்ல எண்ணங்களை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
இன்று திருணம்,கத்னா,குடிபுகுதல் போன்ற சாதாரண நிகழ்சிகளுக்கொல்லாம் இலட்சக்கணக்கில் செலவிடுபவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். அதே வேலை கல்விக் கண்ணைத் திறப்பதற்கு வறுமையொறு தடைக்கல்லாக இருப்பதால் கல்விப்பயணத்தை தொடர முடியாது பலர் மிகவும் தவிக்கின்றார்கள்.
இத்தகைய அறிவுத்தாகத்தில் இருந்து கஸ்டப்படுபவர்களுக்க நாம் கை கொடுத்து உதவி செய்ய வேண்டும். நமது சமூகத்தில் வைத்தியர்கள்,பொறியிலாளர்கள் ,சட்டத்தரணிகள் எழுது விளைஞர்கள் ,கணக்காளர்கள் மேல்பட்டதாரிகள் ,சிறந்த ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் போன்றோர் தொடரணியில் வெளிவர முஸ்லிம் சமூதாயம் சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தை மட்டும் காலமும் நம்பிக் கொண்டிருக்காமல் கல்விக் கூடங்கள்,விஞ்ஞான கூடங்கள்,பொறியியல் பயிற்சிக் கல்லூரிகள் போன்றவற்றை உருவாகத் தெண்டிக்க வேண்டும். நாளை நமது இஸ்லாமிய உம்மத்து கல்வியறிவு இல்லாது கைகட்டி நிற்கக் கூடாது. அதற்காக செய்ய வேண்டிய அத்தனை சிரமங்களையும் இன்று முதல் தலைமேல் கொண்டு செயல் படுவோமாக!
Manaleerul Anwar
Aalima Nooriyyah
0 comments:
Post a Comment