சமூகத்தை வழி நடாத்தும் சிறந்த ஆலிமாக்களை உருவாக்குவோம ஈருலகில் வெற்றி பெறுவோம்

كلية مناضير الانوار العربية للسيدات

மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி

Friday, January 21, 2022

Wednesday, February 13, 2019

குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி

ladies arabic college eravur srilanka
கேஷியஸ் கிளே என்று அழைக்கப்பட்ட அந்த 12 வயது ஆக்ரோசமான முரட்டுச் சிறுவன் குத்துச்சண்டை பயின்று வெற்றிகளை மட்டுமே குவித்தான்  20 வயதில் உலகில் சிறந்த குத்து சண்டை வீரர்களை எல்லாம் தோற்கடித்தான். உலகின் ஹெவி வெய்ட் பாக்சராக வென்றதும்  கேஷியஸ் கிளே  மக்களைப் பார்த்து  ”Who is the greatest…  Who is the greatest” என்று கோப ஆக்ரோசமாக வெறி கொண்டு கேட்டான்.



மௌனமாக இருந்த மக்களை பார்த்து  ”Cassius clay is the greatest”  என்று கூவினான்.  அரங்கம் ஆர்பரித்தது “Clay is the greatest” அதன் பின் அவனின் எல்லா போட்டிகளிலும் ‘Clay is the greatest’ என்பதே முழக்கமாக இருந்தது.



மொத்த போட்டிகள் 61. வெற்றி பெற்றது 56. நாக் அவுட் முறை வெற்றி 37. வெற்றி வாய்ப்பு நழுவியது 5. இது அந்த ஆக்ரோச இளைஞனின் சாதனை வரலாறு.



பின் ஒரு நாளில் இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கேஷியஸ் க்ளே இஸ்லாமைத் தழுவினார். முஹம்மது அலி என பெயர் கொண்டார். செய்தி அறிந்து பேட்டிக்கு குவிந்தனர் நிருபர்கள்.



அவர்களை பார்த்து கேட்டார். “Who is the greatest…?” நிருபர்கள் “Muhammed Ali is the greatest” என்றனர். Who is the greatest என்று வினவும் போதெல்லாம் பதில் வரும் வரை ஆக்ரோசமாக இருப்பவர் புன்னகையுடன் அமைதியாக கை உயர்த்தி “Allah is the greatest”, என்றார்.  கூடியிருந்த கூட்டமும் அதையே கூறியது.



அந்த முஹம்மது அலி என்னும் சாதனையாளர் 1942 ல் கேஷியஸ் க்ளேவாக ஜனித்து முஹம்மது அலி என ஆனவர் 2016 ல் அமெரிக்க காலண்டர் படி  ஜூன் 3 அன்று, (இந்தியக் காலண்டர் படி ஜூன் 4  மாலையில் )  மரணம் அடைந்தார்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Share:

Wednesday, December 12, 2018

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?

ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?
ஷரீஅத் பகுத்தறிவுள்ள மனிதனா?"
விளக்கம்:

பகுத்தறிவுள்ள மனிதன் மட்டும்தான் மற்றொருவரிடம் முறையிட முடியும்,பகுத்தறிவில்லாத ஷரீஅத் எப்படி முறையிடும் என்பது அவரது சந்தேகம்.

பகுத்தறிவில்லாத பேரிச்ச மரமட்டை கண்மணி நாயகம்صل الله عليه وسلم  அவர்களிடம் முறையிட்டது. பகுத்தறிவில்லாத குடும்ப உறவு அல்லாஹ்விடம் முறையிட்டது.
ஸஹுஹான ஹதீஸ்களில் வந்த செய்தி கள் இவை.

ஜாபிர் رضي الله عنه  அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி صلى الله عليه وسلم அவர்கள் நின்று குத்பா ஓதிய ஒரு பேரிச்ச மரத்தின் அடித்தூண் இருந்தது புதிய மிம்பர் வைக்கப்பட்ட போது.(கர்ப்பிணி ஒட்டகைகளிலிருந்து வெளிப்படுவது போன்ற) அழுகுரலை நாங்கள் அந்தப்பேரீச்சைத் தூணிலிருந்து கேட்டோம்.அப்போது நபிصل الله عليه وسلم  அவர்கள் இறங்கி வந்து தமது கையை அதன் மீது வைத்தார்கள்
(புஹாரி,எண்:918)

அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹுத்தஆலா படைப்புகளைப் படைத்து முடித்த போது குடும்பம் உறவு எழுந்தது.'என் உறவை விட்டும் விலகிவிடுவதைப் பற்றி உன்னிடம் காவல் தேடும் நேரம் இது என்றது.
'உன்னை இணைத்தவர்களை நானும் இணைப்பதும்,உன்னைத் துண்டித்தவர்களை நானும் துண்டிப்பதும் உனக்கு திருப்தி தானே!
என்று அல்லாஹ் பதிலுரைத்தான்"
(பஹாரி,எண் 5987).

பகுத்தறிவில்லாத பேரீத்த மரக்கட்டையும்,குடும்ப உறவும் முறையிடும் போது அறிவுகளின் சங்கமமான ஷரீஅத் முறையிடுவதில்  என்ன ஆச்சரியம்?
தான் கேட்டும்; அறிந்தும் மட்டும்தான் உண்மை என்ற இறுமாப்பினால் வந்த வினைதான் இவை போன்ற விமர்சனங்கள்.

sahmith Nooriyyah
Share:

முஹ்யத்தீன் மவ்லீத் பற்றி தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள்

முஹ்யத்தீன் மவ்லீத் பற்றி தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள்
மார்க்கத்தின் முறையீடு
விமர்சனம்:~ 01
அபூபக்கர் அல்ஹமாமி" என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவராகவும் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட செயல்கள் உடையவராகவும் இருந்தார். அவரிடம் "அப்துல் காதிர் ஜீலானி" அவர்கள் நீ வரம்பு மீறியதால் உன்னைப்பற்றி ஷரீஅத் என்னிடம் முறையிடுகின்றது' என்று கூறினார்கள். மேலும் சில காரியங்களை விட்டும் அவரை தடுத்தார்கள். அவர் தவிர்ந்து கொள்ளவில்லை.
அவரது நெஞ்சில் கையை வைத்து "அபூபக்கரே!" பக்தாதை விட்டும் அதன் சுற்றுப்புறங்களை விட்டும் வெளியேறு என்று கூறினார்கள்.
இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவரைப்பற்றி ஷரீஅத் எப்படி முறையிடும்?
விளக்கம்:~
இறைவனால் என்ற சொல் இவராகச் சேர்த்துக்கொண்டது மவ்லிதில் அவ்வாறு இல்லை
كان من ذي الأحوال الرضية والأفعال المرضية
(மக்களால்) பொருந்திக்கொள்ளப்பட்ட நிலைகளும்
(மக்களால்) பொருந்திக்கொள்ளப்பட்ட செயல்களும் உடையவராக இருந்தார்.
என்பதுதான் இதன் பொருள்.
அவருடைய வெளிப்படையான நிலைகளும் செயல்களும் மக்களால் பொருந்திக்கொள்பவையாக இருந்தன.
அந்தரங்கத்தில் அவரிடம் சில குறைகள் இருந்தன. இதன் படி பொருந்திக்கொள்வதற்கும் ஷரீஅத் முறையிடுவதற்குமிடையில் முரண்பாடு எதுவுமில்லை. "இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்ட" என்று பொருள் வைத்தாலும் ஷரீஅத் முறையிடுவதில் பிரச்சினை ஏதுமில்லை .
இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்களிடம் சிற்சில தவறுகள் நிகழலாம்.
நபிமார்கள் மலக்குகளிடம் தவறுகள் நிகழாது. மற்றவர்களிடம் பாவங்கள் நிகழலாம் என்றிருக்க அவர்களிலும் அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் உள்ளனர்.
அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்டவர்கள் நபிமார்கள் மலக்குமார்கள் மட்டும் இல்லையே!
ஸஹாபாக்களிடம் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஸஹாபாக்களைக் குறித்து அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்.
(தவ்பா:100) Qur'an: At-Tawba (9:100)
وَلسَّٰبِقُونَ لْأَوَّلُونَ مِنَ لْمُهَٰجِرِينَ وَٱلْ أَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحْسَٰنٍ رَّضِىَ ٱللَّهُ عَنْهُمْ وَرَضُوا۟ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّٰتٍ تَجْرِى تَحْتَهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيم
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
என்று அல்குர்ஆனில் கூறுகின்றான்.
எனவே இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்ட ஒருவரைப்பற்றி ஷரீஅத் முறையிடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.


விமர்சனம்:- 02
"யாரும் இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்பதற்கு இவை சான்றுகள்"
விளக்கம்:- ' எந்தப் பார்வைகளும் அவனை அடையாது' (6:103) 'மூஸா நபியால் அவனை பார்க்க இயலவில்லை' (7:43) என்பன போன்ற சில ஆதாரங்களைச் சொன்ன பிறகு மேற்ச்சொன்ன வாசகத்தை அவர் எழுதியுள்ளார். இந்த ஆதாரங்கள் இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைக் காண முடியாது என்பதைத் தெரிவிப்பதாக அவர் கருதுகிறார்.
'எந்தப் பார்வைகளும் அவனை அடையாது, என்பதன் பொருள் அல்லாஹு தஆலாவை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது என்பதாகும். அதைத்தான் குர்ஆனில் செல்லப்பட்ட ﻻتركه என்ற வார்த்தை குறிக்கும். அறவே பார்க்க முடியாது என்பதற்கு ﻻيبصر ﻻيري என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லப்பட்ட பதில் 'நிச்சயமாக நீங்கள் எஎன்னைப் பார்க்க மாட்டீர்கள் 'என்பதாகும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட உயர்ந்தவர்களான நபி صلى الله عليه وسلم அவர்கள் பார்ப்பதை இவ்வசனம் மறுக்கவில்லை.
மேலும் புறக் கண்களால் பார்ப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டபோதூ அது மறுக்கப்பட்டது.
இந்த மறுப்பு அகக் கண்களால் வலிமார்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதற்கு முரணாகாது.
விமர்சனம்:-
"மனிதர்களுடன் எவற்றைப் பேச அல்லாஹ் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான். எவரிடமும் இறைவன் பேசவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. என்ற சாதாரண அறிவு கூட மௌலிதை எழுதியவருக்கு இல்லை".
விளக்கம் :-
'மனிதர்களுடன் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான்' என்று கூறுதல் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்ட அஹ்லுல் குர்ஆன் எனும் நவீன இயக்கத்தினரின் வாதமாக ' குர்ஆன் மட்டும்தான் ஆதாரம், ஹதீஸ்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது 'என்று அஅவ்வியக்கத்தினர் கூறுகின்றனர். ஹதீஸ்கள் என்பவை நபி صلى الله عليه وسلم அவர்கள் சுயமாக சொன்னவை அல்ல .அவையும் அல்லாஹ் அறிவித்து கொடுத்தவைதான்.
ஹதீஸ்களில் 'ஹதீஸ் குத்ஸி' என்று ஒரு வகை உண்டு'அல்லாஹூ தஆலா சொன்னான்' என்று கூறி நபி صلى الله عليه وسلم அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள். இவற்றை மறுக்கும் விதமாக அவரது மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.
நபிமார்கள் அல்லாதவர்களுக்கு இல்ஹாம் மற்றும் மனாம்களின் மூலமாகவும் இறை அறிவிப்புகள் வெளிப்படுகின்றன.
'நநுபுவ்வதில் நின்றும் சுபச் செய்திகள் அல்லாமல் மிஞ்சவில்லை' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற 'சுபச் செய்திகள் என்பவை யாவை?'என ஸஹாபாக்கள் கேட்டனர். 'நல்ல கனவுகள் 'என நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள் (புஹாரி எண் :6990)
நபி صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்கள் :'முஃமினின் கனவு நுபுவ்வதின் நாற்பத்தி ஆறில் ஒரு பகுயாகும்' (புஹாரி எண்:6988)
கனவுகள் மூலமாகவும் அல்லாமலும் இறைவன் புறத்திலிருந்து தெய்வீக உதிப்புகள் வருகின்றன, அவை நுபுவ்வத்தை போன்ற உண்மையானவைதான் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றன.
ஆகவே அல்லாஹ் பேச நாடியவை குர்ஆன் மட்டும்தான் என்ற அவரது வாதம் சுக்கு நூறாக உடைகிறது.
F Asmiya Nooriyyah


விமர்சனம் : 03
அப்படியே முறையிடுவதாக இருந்தாலும் ஷரீஅத்துக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ்விடம் முறையிடாமல் இவர்களிடம் ஏன் முறையிட்டது?
விளக்கம் :
(இது அறிவு சார்ந்த கேள்வி அல்ல!ஷரீஅத் சட்டங்களை உருவாக்கிய அல்லாஹுதஆலா தனது சட்டங்களை நேரடியாக அவனே வந்து உலகில் அமுல் படுத்தவில்லை.
நபிமார்கள் ,அறிஞர்கள்,ஆட்சியாளர்கள் மூ
லமாகத்தான் சட்டங்களை அமுல்படுத்துகின்ரான்.
இவ்வுலகில் மக்களுக்கு சட்டங்களை ஏவுபவர்களாகவும் ,மீறினால் அவர்களை தண்டிப்பவர்களாகவும் இம்மூன்று பிரிவினரும் இருக்கின்றனர் .
அல்லாஹுதஆலா குர்ஆனில் கூறுகின்றான்:
"நாம் பூமியில் பிரதிநிதிகளை நியமிக்கிறோம் "(அல்பகரா:30)
பூமியில் சரீஆத் சட்டங்களை அமுல்படுத்துபவர்களாக நபிமார்கள், ஆட்சியாளர்கள் இருக்கும் போது சட்டங்கள் மீறப்படும் நேரங்களில் அவர்களிடம் முறையிடுவதுதான் பொருத்தம்.
ஷரீஅத் சட்டங்கள் மீறப்பட்ட போது ஸஹாபாகள் ஷரீஅத் சட்டங்களுக்குச் சொந்தக்காரனான அல்லாஹ்விடம் முறையிடாமல் அல்லாஹ்வின் பிரதிநிதியான
கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களிடமும் ஏனைய ஸஹாபாக்களிடமும் முறையிட்டார்கள்.
அபூமஸ்வூத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடத்தில் வந்து 'அல்லாஹ்வின் ரஸூலே!அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். இன்ன நபர் தொழுகையை நீட்டுவது காரணமாக ஸுபுஹுத் தொழுகையில் கலந்து கொள்ளலாமல் இருக்கிறேன் என்று கூறிய போது நபி صلى الله عليه وسلم அவர்கள் வேறு எந்த நாளிலும் பார்த்திராத அளவு கடும் கோபத்துடன் அதைக் கண்டித்து சொற்பொழிவு வாற்றினார்கள் .(புகாரி :எண் 702)
ஸுபைர் இப்னு அதி رضي الله عنه அவர்கள் சொல்கிறார்கள் "நாங்கள் அனஸ் رضي الله عنه அவர்களிடம் சென்று ஹஜ்ஜாஜின் கொடுமைகளைச் சொல்லி முறையிட்டோம். பொறுத்துக் கொள்ளுங்கள் வருகிற ஒவ்வொரு கால கட்டமும் அதற்கு முந்தைய காலகட்டத்தை விட மோசமாகத்தான் இருக்கும். இதனை உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து நான் கேட்டேன்"என்று கூறினார்கள்.(புகாரி :எண் 7068)
ஒரு ஸஹாபி தொழுகையை நீட்டிய போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். ஹஜ்ஜாஜிப்னு யூசுப் ஷரீஅத்துக்கு எதிராக கொடுமைகள் புரிந்த போது அனஸ் رضي الله عنه அவர்களிடம்
முறையிட்டார்கள். ஷரீஅத்துக்குச் சொர்தக்காரனான அல்லாஹ்விடம் முறையிடவில்லை.

Moulaviya A.R Asmiya Nooriyya
Moulaviya F  Asmiya Nooriya 
Moulaviya AR Aseena Nooriyyah
Share:

Thursday, November 8, 2018

சுவனத்துப் பேரரசி 14

 அன்னை_ஃபாத்திமா_ரலியல்லாஹூ_அன்ஹா அவர்கள் வாழ்க்கை வரலாறு...!!

பாகம் :14

ஒரு நாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் நபி ஸல்லல்லாஹூ அலைகி வஸல்லம்
அவர்கள்,,,

தனதருமை மகள் ஃபாத்திமா
ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வீட்டிற்கு பேரக் குழந்தைகளைக் காணச்
சென்றிருந்தார்கள்...!

இருவரும் இல்லை.
மகளிடம்
விசாரிக்கின்றார்கள். எங்காவது விளையாடச் சென்றிருப்பார்கள்.

இன்னும் சிறிதுநேரத்தில் வந்து விடுவார்கள் என்று ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

நீண்ட நேரமாகியும்
இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் பேரக் குழந்தைகளைத் தேடி புறப்பட்டார்கள்.

மதீனாவின் எந்த ஒரு
பகுதியிலும் இருவரையும் காண வில்லை.

மதீனாவிற்கு வெளியே
பாலைவனத்தை நோக்கி நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம்
அவர்கள்

ஒரு வித பதற்றத்தோடு அங்கு வருவோர் போவோரிடம்
விசாரித்த வண்ணம் சென்றார்கள்.

ஓரிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம்
அவர்களின் ,,,

முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு அருகில் வந்து
என்ன ஏது? என்று விசாரித்தார்.

 நபி ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம்  அவர்கள் விஷயத்தைக் கூறினார்கள்.

அப்போது, நாயகமே!
கவலைப்பட வேண்டாம், இதோ இங்கு எங்காவது தான் அவர்கள் இருவரும்
இருப்பார்கள்.

சற்று முன்னர் தான்
இங்கு அவர்களை நான் கண்டேன்”என்று கூறிய அவர் அல்லாஹ்வின்
தூதரே!

ஒரு விஷத்தை நான்
உங்களிடம் நான் சொல்லலாமா” என
வேண்டினார்.

நபி ஸல்லல்லாஹூஅலைகிவஸல்லம் அவர்கள் அனுமதி தரவே, அவர் கூறினார்,,,,

“அல்லாஹ்வின் தூதரே!
சற்று முன்னர் தான் இருவரும் இங்கே
வந்தனர்.,,,,

அவர்கள் முகத்தில் நான்
பசியின் ரேகை படர்ந்திருந்ததை
பார்த்து விட்டு,

என் ஆட்டிலிருந்து
பால் கறந்து தரவா? என்று இருவரிடமும் கேட்டேன்...!!

அப்போது,

அவர்கள் இருவரும்”நீங்கள் இந்த மந்தையின்
உரிமையாளரா?” என்று
கேட்டார்கள். நான் இல்லை என்றேன்...!!

அப்படியென்றால்,,,

உங்கள் உரிமையில்
இல்லாத இந்த மந்தையில் உள்ள
ஆட்டில் இருந்து பால் அருந்துவது எங்களுக்கு ஹலால் அல்ல” என்று
கூறி மறுத்து விட்டு,,,

அதோ அங்கிருக்கிற பேரீத்தம் மரம் நிறைந்த
தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார் அந்த இடையர்.

நபி ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள்  அவர்கள் அந்த தோட்டத்திற்கு வந்து பார்க்கின்றார்கள்.

அங்கே ஓர் மரத்தின்
நிழலில் இருவரும் பசிமயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்....!!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் இருவரையும் எழுப்பி,

வாரி அணைத்து முத்தமிட்டு
இருதோள்புஜங்களிலும்
இருவரையும் சுமந்தவர்களாக
தங்களது மகளார் ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா
அவர்களின் வீட்டிற்கு வந்து,,,,

“ஃபாத்திமாவே!

உம் தந்தை
முஹம்மதை விட மிக அழகிய முறையில் குழந்தைகளை
உருவாக்கியிருக்கின்றாய்!

என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்கள்..

இன்ஷா அல்லாஹ்
தொடரும்....!!

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
Share:

Wednesday, November 7, 2018

சுவனத்துப் பேரரசி பாத்திமா

சுவனத்துப் பேரரசி அன்னை பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வாழ்க்கை வரலாறு

ஒரு நாள் ஃபாத்திமா ரலியல்லாஹூ  அன்ஹா அவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் கிடந்தார்கள்....!!!!

கணவர் செய்யதினா அலி ரலிரலியல்லாஹூ அன்ஹூ பக்கத்தில் இருந்து பணிவிடைகள் செய்தார்கள்...!!

அப்போது,,,

மனைவியை நோக்கி,
அன்பு மனைவியே,,,

தாங்களுக்கு பிடித்த மானதை கேளுங்கள் வாங்கி வருகிறேன் என்றார்கள்....!!!!

இதுவரை கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டிராத ஃபாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் ,,,,

இருமனதோடு சரி எனக்கு மாதுளம் பழம் சாப்பிட ஆசையாக உள்ளது என்றார்கள்....!!

சந்தோஷம் தாங்க முடியாமல் கடைத் தெரு நோக்கி புறப்பட்டார்கள்....!!

கடைத்தெருவில் மாதுளம் பழம் கிடைக்க வில்லை....!!!!

அடுத்துள்ள ஒரு ஊரில் தான் மாதுளம் பழம் கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்று ஒரு பழம் வாங்கி கொண்டு வீடு நோக்கி மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள்.

வழியில் ஒரு ஏழை மனிதர் அந்த சாலை ஓரத்தில் மயங்கி கிடந்தார்.

உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவருக்கு பணிவிடை செய்தார்கள்....!!!!

அப்போது அவர் தம்பி பணிவிடைக்கு நன்றி எனக்கு ஒரு ஆசை இருக்கு அதை பூர்த்தி செய்வீர்களா? என்றார்.

சரி சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் செய்கிறேன் என்றார்கள்....!

உடனே அவர் எனக்கு மாதுளம் பழம் சாப்பிட நீண்ட நாட்களாக ஆசையாக இருக்கிறது வாங்கி தருவீர்களா...,,,

என்றதும்,,,,

அதிர்ச்சி அடைந்த அலி ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்கள் திக்கு முக்காடிப் போனார்கள்....!!!!

இருப்பதோ ஒன்று அதை இதுவரை எதுவுமே வாங்கி கேட்டிராத மனைவிக்கா?

அல்லது,,,,,,

இந்த வழிப் போக்கருக்கா? என்ற போராட்டம் மனதில் ஒடியது..!!

முடிவில் இது அல்லாஹ்வின் சோதனை என்று அந்த முதியவருக்கே கொடுத்து விட்டார்கள்....!!!!

பின்பு சோர்வுடன் வீடு நோக்கி வந்தார்கள் நோயில் கிடந்த பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா மிக்க முகலர்ச்சியுடன் கணவரை வரவெற்றார்கள்...!!

வழியில் நடந்ததை மனைவியிடம் சொன்னார்கள்...!

அதற்கு பாத்திமா ரலியல்லாஹூ  அன்ஹா தாங்கள் செய்த தர்மத்தால்.,, அல்லாஹ் எனது நோயை குணமாக்கினான் என்றார்கள்....!!!

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.திறந்த போது சல்மான்பாரிசி
ரலியல்லாஹூ  அன்ஹூ  அவர்கள் நின்றார்கள்...!!

கையில் ஒரு சிறிய கூடை இருந்தது.இறக்கி வைத்து விட்டு இவைகளை இன்னார் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார், என்று கூடையை ஒப்படைத்தார்கள்....!!!!

கூடையில் மாதுளம் பழம் இருந்தது. அலி ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்கள்  பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா இருவரும் பெரும் ஆச்சரியம் அடைந்தார்கள்...!!

அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹவைப் புகழ்ந்தார்கள்....!!!!

உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ  கூடையில் இருந்த மாதுளம் பழ்ங்களை எண்ணினார்கள்...!!

அதில் 9-மாதுளம் பழங்கள் தான் இருந்தன. உடனே அலி ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்கள்,,, ஸல்மான் பாரிசி(ரலிரலியல்லாஹூ  அன்ஹூ) அவர்களே, வீடு மாறி கொண்டு வந்து விட்டீர்கள் இது எங்களுக்குரியது அல்ல.,,, என்றார்கள்...!!

உங்களுக்காகத்தான் உங்களுக்கே உரியது தான் என்றார்கள்....!!!!

அதற்கு அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அல்லாஹ் குர் ஆனில் "மனிஜாஅ பில் ஹஸனத்தி அஸரத்தி அம்சாலிஹா" ஒரு நன்மை
செய்தால் அதற்கு அதுபோல 10 வழங்குவோம், என்று அல்லாஹ் சொல்கிறான்...!!!!

சற்று முன்நான் ஒரு மாதுளம் பழம் தர்மம் செய்தேன் ஒன்றுக்கு பத்து அல்லவா,,, வந்திருக்க வேண்டும்..?

கூடையில் 9 பழங்கள் தானே உள்ளது என்று விள்க்கமளித்தார்கள்.

இதைக் கேட்ட ஸல்மான் பாரிசி(ரலியல்லாஹூ ) அவர்கள் சட்டையில் மறைத்து வைத்துள்ள ஒரு மாதுளம் பழத்தை வெளியே எடுத்து கூடையில் போட்டார்கள்....!!!!

அலியே! உங்களை சோதிப்பதற்காகத்தான் வழியில் ஒரு பழத்தை எடுத்து மறைத்தேன் என்றார்கள்....!!

பாத்திமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது,...!!

அல்லாஹ்வின் உதவியை நினைத்து மகிழ்ந்தார்கள்....!!!!

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

இன்ஷா அல்லாஹ்
தொடரும்......!!
மாபிர்
ஸித்றத்துல் முன்தஹா
Share:

Tuesday, November 6, 2018

நாயகத்தின் மீது நேசம் வைப்போம்

நாயகத்தின் மீது நாயகனின் நேசம். நாமும் வைத்திடுவோம்
மீலாது கொண்டாடிடுவோம் வாரீர் வாரீர்..
الصلاة والسلام عليك يا سيدي يا رسول ألله
 ஆணவத்தை கழட்டி வைப்போம் நானென்ற மமதையை குழிதோண்டி  புதைத்து வைப்போம். மாநபியின் மாண்புதனை மனமாற புகழ்ந்திடுவோம்   வாரீர் வாரீர்....

கரைபடிந்த உள்ளத்தினை கவிநாயகரின் புகழ் மழையில் கழுவிடுவோம்     வாரீர் வாரீர்....

பண்பு நபியின் மாண்புதனை அறிந்திடுவீராயின் அறுத்துடுவீர் அடுத்தகணமே உம்மை அரசாட்ச்சி கொள்ளும் உம் அம்மாரா  நப்ஸுதனை
அறுத்திடுவோம்    வாரீர் வாரீர்....

மூடர்களின் வாக்குதனில் தனை  மாய்த்துக்கொண்ட மானிடரே!... 
மானிடருக்காக மாரிடம் வென்று  மனித ரூபம் கொண்டு மண்ணுலகம் வந்துதித்த மாமனிதரை போற்றிடுவோம்    வாரீர் வாரீர்.....

கபுரதுவோ நம் காலடியில் நினைக்கையிலே கழங்கிடுதே.. மறுமையதோ நொடிப்பொழுதில் திடுக்கிடுதே கனப்பொழுதில்  உலகத்தின் சிற்றின்பம்
வந்திடுமோ நமைக்காக்க??
காணல் நீராகிப் போகிடுமே...

"கழங்கிடும் நெஞ்சினிலே அமைதி தரும் அன்பு நபியை மன மாற அன்பு வைத்திடுவோம்"..       வாரீர் வாரீர்.....

ஈருலகை வென்றிடலாம் மாநபியின் நேசத்தினால்.. மாமறையே பரைசாற்றிடுதே..

வல்லோன் இறையோன்
ஈருலகின் நாயகராம் எம்  மாகராஸரை நேசம் கொண்ட மான்பதனை...
(நவினிக்க எம்மாநபியை (யாநபியே!!)) என்று கல்பினிக்க அழைக்கின்றான் எம்மிறைவன்.. 
நாமும் எம் கல்பினிக்க  அழைத்திடுவோம், புகழ்திடுவோம்.. மீலாது கொண்டாடிடுவோம்
வாரீர் வாரீர்......

يا نبي سلام عليكم
يا رسول سلام عليكم
يا حبيب سلام عليكم
صلوات ألله عليكم 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 
ஆலிமா ஏ.ஆர் அஸ்மியா நூரிய்யாஹ்  மனாழீறுல் அன்வார் மகளிர் அரபுக் கல்லூரி ஏறாவூர்.
Share:

Total Pageviews